தமிழ்நாட்டில் ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிநடத்த வேண்டுமென தி.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்


ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிகளுக்கு அனுமதி அளிக்காத மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக  தி.மு.க வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக தி.மு.க வின் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தி.மு.க வினர் கலந்து கொண்டனர். ரேக்ளா வண்டிகளிலும், கரும்புகளை ஏந்தியபடியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க வினர், தமிழகத்தில் ஜல்லிகட்டு மற்றும் ரேக்ளா போட்டிகள் நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். 

ஆப்பாட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசுகையில்; தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிகட்டு, ரேக்ளா போட்டிகள் நடத்தப்படும் எனவும், மத்திய மாநில அரசுகள் உரிய அனுமதியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...