சீராக குடிநீர் விநியோகிப்பது குறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆய்வு



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  வறட்சி பாதிப்பு மற்றும் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, அனைத்து மாவட்டங்களிலும் வறட்சி தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு, தமிழகம் வறட்சி மாநிலம் என அறிவித்து பயிர்களுக்கு தகுந்தபடி நிவாரணம் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர் கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். குடி நீர் பற்றாகுறை சூழலை பயன்படுத்தி  சிலர் போராட்ட சூழல்களை  ஏற்படுத்துவதாகவும், இதனை தவிர்த்து முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும் 140 வருடங்களுக்கு பின்னர் கடும் வறட்சி நிலவும் நிலையில் பொதுமக்களும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினை அதிகரிக்கும் நிலையில், சிறுவாணி அணையில் தேங்கி இருக்கும் தண்ணீரை உறிஞ்சி எடுத்து  கோவை கொண்டு வருவது தொடர்பாக கேரள அதிகாரிகளுடம் தமிழக அதிகாரிகள்  கடந்த இரு தினங்களாக பேச்சுவார்த்தை  நடத்தி வருவதாகவும், விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் வறட்சி தொடர்பாக அறிவிக்க மத்திய அரசு சில விதிமுறைகளை வைத்து இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர், தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டு இருப்பதாகவும், வறட்சி தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்பட்டு விட்டது எனவும் தெரிவித்த அமைச்சர் வேலுமணி  மத்திய அரசிடம் தேவையாக நிதியை  தமிழக அரசு கேட்டுப்பெறும் எனவும் மத்திய அரசும் மக்கள் பிரச்சினையை கருத்தில் கொண்டு உதவ முன்வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாநகராட்சி, குடிநீர்வடிகால் வாரியம், வேளாண்மை துறை, வருவாய் துறை, காவல் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...