ரோபோடிக் அறுவை சிகிச்சை செய்து கோவை மெடிக்கல் சென்டர் சாதனை


இயந்திர விசையைச் கொண்டு (ரோபோடிக்) அறுவை சிகிச்சை செய்முறையை தற்பொழுது கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை கொண்டுவந்துள்ளது. இந்த அறுவைசிகிச்சை முறையில் ஈடுபடுபவர்கள் ஓரிரு மருத்துவர்களே ஆகும்.

மருத்துவர்கள் ரோபோடிக் இயந்திரத்தின் உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறார்கள். மருத்துவர்கள் கன்சோல் என்ற அமைப்பின் முன் அமர்ந்து ரோபோடிக் இயந்திரத்தின் கருவிகளை இயக்கி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடிக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாமல் ரோபோடிக் அறுவை சிகிச்சையால் பல்வேறு நன்மைகள் உண்டு. ஒரு மிகச்சிறிய துளையின் வழியாக உடல் உறுப்புகளை அணுகி அதன் மூலம் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் உடலில் சிறிய தழும்பு மட்டுமே ஏற்படும். அது தவிர நோயாளிக்கு ஏற்படும் இரத்தக்கசிவும் மிகக்குறைவு.

கேஎம்சிஎச் ரோபோடிக் கார்டியாக் சர்ஜரி இன்ஸ்டிடியூட் இயக்குநர், தலைமை ஆலோசகர் மற்றும் மார்பு பகுதி அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் பிரஷாந்த் வைஜியநாத் 10 ஆயிரம் அறுவை சிகிச்சை செய்த சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் பைபாஸ், சிக்கலான பெருந்தமணி குருதி நாள யெளிவு, வால்வு பழுது மற்றும் ரேடோ பைபாஸ் அறுவை சிக்சை போன்றவற்றை மேற்கொண்டுள்ளார்.

கொங்கு மண்டலத்திலேயே கேஎம்சிஎச் மருத்துவமனையில் இவர் தான் முதல் இருதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். ரோபோடிக் இருதய அறுவை சிகிச்சையிலும் பயிற்சி பெற்றவர் மருத்தவர் பிரஷாந்த் வைஜியநாத்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இருதய ரோபோடிக் அறுவை சிகிச்சை நேற்று முதல்முறையாக நடைபெற்றது. இதுகுறித்து கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் நல்ல ஜி.பழனிச்சாமி கூறுகையில், "வழக்கமாக மேற்கொள்ளப்படும் 10 - 12 அங்குலம் அளவிற்கு மார்பை திறத்து செய்யப்படும் அறுவை சிகிச்சையை காட்டிலும், ரோபோடிக் அறுவை சிகிச்சை 1 - 2 செ.மீட்டர் அளவில் குறைந்த அளவு கருவிகளைக் கொண்டு செய்யப்படுகிறது. 



குறைந்த அளவு வலி, மயக்க அளவு, இரத்த இழப்பு, விரைவாக குணமடைதல், சிறிய அளவிலேயே ஏற்படும் தழும்பு போன்றவை இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். அதிக நாட்கள் மருத்துவமனையில் தங்காமல் ஒரு சில நாட்களிலேயே குணமடைந்து வீட்டுக்கு திரும்ப இயலும்" இவ்வாறு கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...