பொள்ளாச்சி அருகே குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை..!

இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆனைமலை போலீசார், தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை - சேத்துமடை ரோடு, மாசாணியம்மன் கோயில் மண்டபம் எதிரே உள்ள, தனியார் காம்பவுண்ட் குடியிருப்பில் வசித்து வருபவர் தினேஷ்(27). இவர், ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் வீதியில் தேங்காய், பழம் விற்கும் கடையில் பணியாற்றி வந்தார். இவர் வசிக்கும் காம்பவுண்டில் 15 குடியிருப்புகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில், இவரது அக்கா பரமேஸ்வரியும் வசித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று அப்பகுதியில் குழாயில் தண்ணீர் பிடிப்பதில், பரமேஸ்வரிக்கு அதே காம்பவுண்டில் வசித்து வரும் அகல்யா என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் அகல்யாவின் அம்மா பானுமதி, பரமேஸ்வரியின் தம்பி தினேஷ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், நேற்று அகல்யாவின் கணவர் தமிழ்ச்செல்வன், அவருடைய உறவினர் ராகவேந்திரன் மற்றும் சிலர் தினேஷை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த ஆனைமலை போலீசார் சம்பவம் தொடர்பாக, அகல்யா மற்றும் அவரது தாயார் பானுமதி ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள தமிழ்ச்செல்வன், ராகவேந்திரன் மற்றும் சிலரை ஆனைமலை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...