கோவையில் ஒரு மாநகராட்சி, 7-நகராட்சிகள், 33-பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. ஜி.சி.டி கல்லூரி வளாகத்தில் இன்று காலை பாதுகாப்பான அறையினுள் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 3-அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை: கோவை ஜி சி டி கல்லூரில்மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு போலீசாரின்மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில்ஒரு மாநகராட்சி, 7-நகராட்சிகள், 33-பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்றைய தினம் நடைபெற்றது. மொத்தமுள்ள 802-பதவிகளுக்கு 3-ஆயிரத்து 366-பேர் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில், 2303-வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 424-வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டது. பதட்டமான வாக்குச் சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டது. அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் அங்கு நடக்கும் அனைத்து கட்சிகளும் நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.
காலை முதல் பொது மக்கள் ஆர்வத்துடன் வாக்கினைப் பதிவு செய்தனர். மாலை 5-மணியில் இருந்து 6- மணி வரை பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படதால் சிறிது நேரம் பரபரபுடன் காணப்பட்டது.
இதனையடுத்து, வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக போலீசார் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு அனுப்பட்டது.
இதனையடுத்து, ஜி சி டி கல்லூரிவளாகத்தில் 1-மாநகராட்சியின் 100-வார்டுகளுக்கான வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.இன்று காலை பாதுகாப்பான அறையினுள் அனைத்து பெட்டிகளும் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

3-அடுக்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வளாகம் முழுவதும் சிசி டிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. அடையாள அட்டை வைத்திருக்கும் நபர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகினர்.
வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாநாகராட்சி துணை ஆணையர் மற்றும் அப்சர்வர் ஆய்வு மேற்கொண்டனர். 22-ஆம் தேதி காலை 7-மணி முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.