தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுக் காணாமல் போய்விட்டார் என கூறி வருகின்றார். நான் எங்கேயும் காணாமல் போய்விடவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாகக் கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
கோவை: கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ராஜவீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-

திமுக ஆட்சியில் இரண்டாம் தவணை தடுப்பூசி சுமார் 10 கோடி பேருக்குப் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரே ஒரு முதல்வர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று கொரோனா நோயாளிகள் நேரடியாகப் பார்த்து ஆய்வு மேற்கொண்டது தமிழகத்தில் மட்டும் தான். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். கொரோனா காலகட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கு மளிகை தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரமாகப் படுவார்கள். கோவை அவினாசி மேம்பாட்டுத்திட்டத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்தில் மேம்பாலம் அருகில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் மகளிர் போட்டியிட்டுள்ளனர். இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது திமுக தான். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுக் காணாமல் போய்விட்டார் என கூறி வருகின்றார்.

நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன் எங்கேயும் காணாமல் போய்விடவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாகக் கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர் கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் பேசியதாவது:-
திமுக ஆட்சியில் இரண்டாம் தவணை தடுப்பூசி சுமார் 10 கோடி பேருக்குப் போடப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே ஒரே ஒரு முதல்வர் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று கொரோனா நோயாளிகள் நேரடியாகப் பார்த்து ஆய்வு மேற்கொண்டது தமிழகத்தில் மட்டும் தான். நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான். கொரோனா காலகட்டத்தில் குடும்ப அட்டைகளுக்கு மளிகை தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரமாகப் படுவார்கள். கோவை அவினாசி மேம்பாட்டுத்திட்டத்தில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்று மக்கள் புகார் மனு அளித்துள்ளனர். இந்த கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மழைக்காலத்தில் மேம்பாலம் அருகில் தண்ணீர் தேங்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீதம் மகளிர் போட்டியிட்டுள்ளனர். இந்த 50 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது திமுக தான். தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதிகளைக் கொடுத்து விட்டுக் காணாமல் போய்விட்டார் என கூறி வருகின்றார்.
நான் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன் எங்கேயும் காணாமல் போய்விடவில்லை. உங்கள் வீட்டுப் பிள்ளையாக, தலைவரின் மகனாக, கலைஞரின் பேரனாகக் கேட்கிறேன் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர் கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.