திருப்பூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

131 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள சூழ்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளுக்கு 776 வாக்குப்பதிவு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



இதில், 131 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.



பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகும் காட்சிகளை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து நேரடியாகப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.



இதனை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வினித் நேரில் ஆய்வு செய்தார்.



இதனை மாநகராட்சி ஆணையாளரும் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விளக்கிக் கூறினார். மேலும் வாக்குப் பதிவு மையங்களுக்கு அனுப்ப உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனம் மற்றும் பொருட்களையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...