சசிகலா காலில் விழுந்து ஆட்சி அமைக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக ஆட்சி அமைத்துள்ளோம்- உதயநிதி ஸ்டாலின்

சசிகலா காலில் விழுந்து ஆட்சி அமைக்கவில்லை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக ஆட்சி அமைத்துள்ளோம் என எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்குப் பொள்ளாச்சி பிரச்சார கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்து வாக்கு சேகரித்தார்.


கோவை: பொள்ளாச்சி நகர மன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொள்ளாச்சி பல்லடம் சாலையில் உள்ள ராஜேஸ்வரி திடலில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.



அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய போது முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தை முடக்கப் போவதாகக் கூறுகிறார்.



எடப்பாடி பழனிசாமி போல பாஜகவிற்கு அடிமையாக இருந்தும், கூவத்தூர் சென்று சசிகலா காலில் விழுந்து முதல்வராக வரவில்லை. நாங்கள் மக்களைச் சந்தித்து மக்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்து அவர்களின் அன்பைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளோம்.



எடப்பாடியின் உருட்டல், மிரட்டலுக்கு திமுக அஞ்சாது. ஏராளமான வாக்குறுதிகளை அளித்து விட்டு என்னைக் காணவில்லை என்று எடப்பாடி கூறுகிறார். நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றும் கூட்டத்தில் அவருக்கு நேர் எதிரே அமர்ந்து இருந்தேன்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியைப் பற்றி பாராளுமன்றத்தில் தமிழகத்தைப் பார்த்துத் திருந்துங்கள் என்று ராகுல் காந்தி பேசியுள்ளார். திமுக இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று தெரிவித்த உதயநிதி மகளிருக்கு அறிவித்த மாதம் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.



கோவை மாவட்டம் அதிமுக கோட்டையாக உள்ளதாகக் கூறி வரும் அதிமுகவினருக்கு இந்த தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...