ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்து கோவில் பூசாரிகள் உள்பட பக்தர்கள் பயபக்தியுடன் வந்து 40 அடி நீளமுள்ள தீக்குண்டத்தில் இறங்கினர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா பிப்ரவரி 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, நேற்று முன்தினம் மயான பூஜை, நேற்று இரவு சித்திரைத் தேர் திருவீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்து கோவில் பூசாரிகள் உள்பட பக்தர்கள் பயபக்தியுடன் வந்து 40 அடி நீளமுள்ள தீக்குண்டத்தில் இறங்கினர்.

முன்னதாக, கோவில் பூசாரி பூ பந்து தீக்குண்டத்தில் உருட்டிவிட்ட பின்னர் வரிசையாக விரதமிருந்த பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த குண்டம் திருவிழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர கோவை மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் கோவை, திருப்பூர், மதுரை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான குண்டம் திருவிழா பிப்ரவரி 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து, நேற்று முன்தினம் மயான பூஜை, நேற்று இரவு சித்திரைத் தேர் திருவீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில், முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆழியாறு ஆற்றங்கரையில் இருந்து கோவில் பூசாரிகள் உள்பட பக்தர்கள் பயபக்தியுடன் வந்து 40 அடி நீளமுள்ள தீக்குண்டத்தில் இறங்கினர்.
முன்னதாக, கோவில் பூசாரி பூ பந்து தீக்குண்டத்தில் உருட்டிவிட்ட பின்னர் வரிசையாக விரதமிருந்த பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த குண்டம் திருவிழாவுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வர கோவை மாவட்ட நிர்வாகம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் கோவை, திருப்பூர், மதுரை மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் திருவிழாவில் கலந்து கொண்டனர்.