தஞ்சை மாவட்டம் மைகேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை: சென்னையில், முதல்வர் வீட்டு முன் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என, பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் மைகேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு முன், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர்கள், 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களை நள்ளிரவு வரை அங்கும் இங்கும் அலைக்கழித்துள்ளனர்.
இதற்கு பா.ஜ.க, சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தவும், உரிமைகளை கேட்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு.
அதன் அடிப்படையில்தான் மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். கைது செய்யப்பட்ட 33 பேரையும் போலீசார் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் மைகேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு முன், அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர்கள், 33 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களை நள்ளிரவு வரை அங்கும் இங்கும் அலைக்கழித்துள்ளனர்.
இதற்கு பா.ஜ.க, சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தவும், உரிமைகளை கேட்கவும் அனைவருக்கும் உரிமை உண்டு.
அதன் அடிப்படையில்தான் மாணவர்கள் போராட்டம் நடத்தி உள்ளனர். கைது செய்யப்பட்ட 33 பேரையும் போலீசார் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.