உதகை அருகே காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கு: 3 வது குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3 வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


கோவை: உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3 வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உதகை அருகே உள்ள மாவனல்லா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு 50 வயதுடைய காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி காயமடைந்த யானைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. ஆனால் பலத்த காயம் காரணமாக அன்றே யானை உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனையில் யானையின் காதுப் பகுதியில் பலத்த தீக்காயம் இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதுதொடர்பாக வனத்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில், மாவநல்லா பகுதியில் தனியார் தங்கும் விடுதியிலிருந்த சிலர் யானைக்குத் தீவைத்த காணொலி வலைத்தளங்களில் பரவியது.

இதில் ரிக்கி ராயன் என்பவரது விடுதி வழியாக வந்த யானையைத் துரத்த ரிக்கி ராயனின் சகோதரர் ரேமண்ட் டீன், இவர்களோடு பணியிலிருந்த பிரசாந்த் ஆகியோர் யானைக்குத் தீவைத்து வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்த வனத்துறையினர் அந்த விடுதிக்குச் சீல் வைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ரேமண்ட் டீன் விடுதிப் பணியாளர் பிரசாந்த் ஆகியோரைக் கைதுசெய்தனர். இவர்கள் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ரிக்கிராயன் கடந்த ஓராண்டுக் காலமாகத் தலைமறைவாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் உதகை நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர் கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நீதிமன்றத்தில் சரணடைந்த ரிக்கி ராயன் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...