உதகை அருகே காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கு: 3 வது குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3 வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


கோவை: உதகை அருகே மாவனல்லா பகுதியில் கடந்தாண்டு காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் 3 வது குற்றவாளியாக சேர்க்கபட்ட ரிக்கி ரயான் நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து, 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

உதகை அருகே உள்ள மாவனல்லா, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு 50 வயதுடைய காட்டு யானை முதுகில் பலத்த காயத்துடன் சுற்றித்திரிந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி காயமடைந்த யானைக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கப்பட்டது. ஆனால் பலத்த காயம் காரணமாக அன்றே யானை உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனையில் யானையின் காதுப் பகுதியில் பலத்த தீக்காயம் இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதுதொடர்பாக வனத்துறை தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில், மாவநல்லா பகுதியில் தனியார் தங்கும் விடுதியிலிருந்த சிலர் யானைக்குத் தீவைத்த காணொலி வலைத்தளங்களில் பரவியது.

இதில் ரிக்கி ராயன் என்பவரது விடுதி வழியாக வந்த யானையைத் துரத்த ரிக்கி ராயனின் சகோதரர் ரேமண்ட் டீன், இவர்களோடு பணியிலிருந்த பிரசாந்த் ஆகியோர் யானைக்குத் தீவைத்து வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிந்த வனத்துறையினர் அந்த விடுதிக்குச் சீல் வைத்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ரேமண்ட் டீன் விடுதிப் பணியாளர் பிரசாந்த் ஆகியோரைக் கைதுசெய்தனர். இவர்கள் தற்போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் ரிக்கிராயன் கடந்த ஓராண்டுக் காலமாகத் தலைமறைவாக இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன் உதகை நீதிமன்றத்தில் முன் பிணை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், இவர் கூடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். நீதிமன்றத்தில் சரணடைந்த ரிக்கி ராயன் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...