மாசாணியம்மன் கோவிலில் நாளை குண்டம் திருவிழா

பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குண்டம் திருவிழாக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நாளை நடக்க இருக்கும் குண்டம் திருவிழாக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இக்கோவிலுக்குத் தினந்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்த கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது நாளை காலை 9.30 மணிக்குக் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.



இதற்காகக் குண்டம் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் தீவிரமாகக் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வருகின்றது. ஆண்கள் பெண்கள் தனித்தனியாக நின்று குண்டம் திருவிழாவைக் காணத் தடுப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், பக்தர்கள் குண்டம் இறங்குவதை வளாகத்திற்கு வெளியில் நின்று நிகழ்ச்சிகளை ட்ரோன் கேமரா பயன்படுத்தி நேரலை காட்சிகளை 2 எல்இடி திரைகளில் மூலமாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர்.

கோயிலைச் சுற்றி பல்வேறு இடங்களில் கூடுதல் மின் விளக்கு அமைக்கப்பட்டுக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குண்டம் இறங்கும் இடத்தில் ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தயார் நிலையில் உள்ளனர். மேலும் குண்டம் திருவிழாவைக் காண வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகக் கூடுதலாக வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

போலீசார் ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படையினர் என 350 க்கும் மேல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் இந்த ஆண்டு திருவிழாவுக்கு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...