கோவை, கூடலூர் நகராட்சியின் 6 வது வார்டு, திமுக நிர்வாகியின் வாகனத்திலிருந்து ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை, கூடலூர் நகராட்சியின் 6 வது வார்டு, திமுக நிர்வாகியின் வாகனத்திலிருந்து 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுவதையொட்டி வேட்பாளர்களின் இறுதி கட்ட பிரச்சாரம் அனல் பறக்கத் துவங்கியுள்ளது.
இந்த நிலையில் 27 வார்டுகளை கொண்ட புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட கூடலூர் நகராட்சியிலும் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த நகராட்சியில் உள்ள 6 வது வார்டில் திமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் கூடலூர் பேரூராட்சியின் தலைவருமான அறிவரசு போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதனால், அதிமுக - திமுக இடையே இவ்வார்டில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், 6 ஆம் வார்டில் சுயேட்சையாகப் போட்டியிடும் விக்னேஸ் என்பவர் தேர்தல் பறக்கும் படையினருக்கு திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கலால் துறை தாசில்தார் ஜெயசித்ரா தலைமையிலான பறக்கும் படையினர் விக்னேஸ் புகாரளித்த பகுதிக்குச் சென்றனர்.

அப்போது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திமுக பிரமுகர் கோபால் என்பவருக்குச் சொந்தமான டூவீலரில் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகளைப் பறிமுதல் செய்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயாவிடம் ஒப்படைத்தனர்.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறுவதையொட்டி வேட்பாளர்களின் இறுதி கட்ட பிரச்சாரம் அனல் பறக்கத் துவங்கியுள்ளது.
இந்த நிலையில் 27 வார்டுகளை கொண்ட புதிதாகத் தரம் உயர்த்தப்பட்ட கூடலூர் நகராட்சியிலும் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
இந்த நிலையில், இந்த நகராட்சியில் உள்ள 6 வது வார்டில் திமுக தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் கூடலூர் பேரூராட்சியின் தலைவருமான அறிவரசு போட்டியிடுவதால் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இதனால், அதிமுக - திமுக இடையே இவ்வார்டில் கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், 6 ஆம் வார்டில் சுயேட்சையாகப் போட்டியிடும் விக்னேஸ் என்பவர் தேர்தல் பறக்கும் படையினருக்கு திமுகவினர் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதாக புகார் அளித்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கலால் துறை தாசில்தார் ஜெயசித்ரா தலைமையிலான பறக்கும் படையினர் விக்னேஸ் புகாரளித்த பகுதிக்குச் சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திமுக பிரமுகர் கோபால் என்பவருக்குச் சொந்தமான டூவீலரில் இருந்து ரூ.2.10 லட்சம் மதிப்புள்ள 210 ஜோடி வெள்ளிக் கொலுசுகளைப் பறிமுதல் செய்து நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயாவிடம் ஒப்படைத்தனர்.