கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கோவை: கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் உள்ள வரசித்தி செல்வ விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் உள்ளது.
இந்த திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் குடங்கள் வைத்து யாக பூஜை நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் தீர்த்த குடங்களை மேளதாளங்களுடன் கோபுரத்துக்குக் கொண்டுசென்று கோபுரத்தில் உள்ள கலசத்திற்குப் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து செல்வ விநாயகருக்குச் சிறப்பு அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
இந்த கும்பாபிஷேக விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பொள்ளாச்சி சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் உள்ளது.
இந்த திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் குடங்கள் வைத்து யாக பூஜை நடத்தப்பட்டது. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.
யாக சாலையில் வைக்கப்பட்ட புனிதநீர் தீர்த்த குடங்களை மேளதாளங்களுடன் கோபுரத்துக்குக் கொண்டுசென்று கோபுரத்தில் உள்ள கலசத்திற்குப் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து செல்வ விநாயகருக்குச் சிறப்பு அபிஷேக பூஜை செய்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
இந்த கும்பாபிஷேக விழாவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.