கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19 நாட்களில் இதுவரை ரூ.43.15 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.7.44 லட்சம் மதிப்புள்ள 3,771 பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 19 நாட்களில் இதுவரை ரூ.43.15 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.7.44 லட்சம் மதிப்புள்ள 3771 பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சி பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக மாநகராட்சி 5 மண்டலங்களில் ஒரு மண்டலத்துக்கு ஒரு ‘ஷிப்ட்'க்கு ஒரு பறக்கும் படை வீதம், 3 ஷிப்ட்களுக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பறக்கும் படை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, அனைத்து மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி 100 வார்டுகளில் 15 லட்சத்து 61,819 வாக்காளர்கள் உள்ளனர். 1290 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் பறக்கு படையினரால் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.43.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 15 ம் தேதி வரை 19 நாட்களில் இதுவரை ரூ.43.15 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.7.44 லட்சம் மதிப்புள்ள 3771 பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.
கோவை மாநகராட்சி பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக மாநகராட்சி 5 மண்டலங்களில் ஒரு மண்டலத்துக்கு ஒரு ‘ஷிப்ட்'க்கு ஒரு பறக்கும் படை வீதம், 3 ஷிப்ட்களுக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பறக்கும் படை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி முதல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, அனைத்து மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மாநகராட்சி 100 வார்டுகளில் 15 லட்சத்து 61,819 வாக்காளர்கள் உள்ளனர். 1290 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் 169 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் பறக்கு படையினரால் இதுவரை உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.43.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் பிப்ரவரி 15 ம் தேதி வரை 19 நாட்களில் இதுவரை ரூ.43.15 லட்சம் பணம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ரூ.7.44 லட்சம் மதிப்புள்ள 3771 பட்டுப் புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,’’ என்றார்.