சுல்தான்பேட்டை அருகே பைக் சென்று கொண்டிருந்த போது, பின்னே வந்த லாரி, மோதியதில் இரி சக்கர வாகனத்தில் சென்ற கணவன் - மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.
திருப்பூர்: திருப்பூர் - மங்கலம் சாலையில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் செல்வம் என்பவர் தனது மனைவி பழனியம்மாள் மற்றும் இருமகன்கள்சஞ்சய் (8) மற்றும் சரவணன் (7) ஆகியோருடன் திருப்பூரை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, சுல்தான்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னே வந்த லாரி, இரு சக்கர வாகனத்தில் மோதியதில் வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில், செல்வம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்தஇரண்டு குழந்தைகளும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்போது, சுல்தான்பேட்டை அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னே வந்த லாரி, இரு சக்கர வாகனத்தில் மோதியதில் வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இந்த விபத்தில், செல்வம் மற்றும் அவரது மனைவி பழனியம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் காயமடைந்தஇரண்டு குழந்தைகளும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் மங்கலம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.