நீண்ட இடைவெளிக்கு பின்னர், நாளை முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறப்பு

நாளை 16 ஆம் தேதி முதல் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளுக்கான பள்ளிகளையும், பிளே ஸ்கூல் எனப்படும் மழலையர் பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.


கோவை: நீண்ட இடைவெளிக்கு பிறகு, நாளை முதல் எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகள் துவங்க உள்ளன.

தமிழகத்தில், கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. இதன்படி, இம்மாதம் 1ம் தேதி முதல், பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., போன்ற நர்சரி வகுப்புகளுக்கான பள்ளிகளையும், பிளே ஸ்கூல் எனப்படும் மழலையர் பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்படி, நாளை முதல் நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்த பள்ளிகளில், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிப்பதால், கொரோனா தொற்று மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வகையில் சிறப்புக் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிகளில், குழந்தைகள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு உற்சாகமூட்டும் பாடங்களை நடத்த, தொடக்க கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அரசு பள்ளிகள் சிலவற்றிலும், அவற்றின் அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களிலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் உள்ளன. அவற்றில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பகுதிகளில், பள்ளிகள் ஓட்டு சாவடிகளாக பயன்படுத்தப்பட உள்ளதால், ஓட்டுப்பதிவு முடிந்து, 21 -ம் தேதி முதல் வகுப்புகளை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...