கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரைக் கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை: கிணத்துக்கடவு பழைய செக்போஸ்ட் பகுதியில் நள்ளிரவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த இளைஞரைக் கைது செய்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள பழைய செக்போஸ்ட் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து உள்ளார்.
பின்னர் அந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்தார்.
சந்தேகமடைந்த போலீசார் நள்ளிரவில் சுற்றித்திரிந்த வடபுதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞரைக் கைது செய்து அவர் மீது சந்தேகம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கிணத்துக்கடவு கோவை சாலையில் உள்ள பழைய செக்போஸ்ட் அருகே நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு நபர் சுற்றித்திரிந்து உள்ளார்.
பின்னர் அந்த நபரைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு முரணாகப் பதில் அளித்தார்.
சந்தேகமடைந்த போலீசார் நள்ளிரவில் சுற்றித்திரிந்த வடபுதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞரைக் கைது செய்து அவர் மீது சந்தேகம் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.