கோவில்பாளையத்தில் முன்னால் சென்ற ஈச்சர் வேன் மீது கார் மோதிய விபத்து குறித்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவில்பாளையத்தில் முன்னால் சென்ற ஈச்சர் வேன் மீது கார் மோதிய விபத்து குறித்து, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் மகன் அக்னிஸ்வரன் (வயது 25) இவர் நேற்று தனது பாட்டி ராஜகுமாரியை காரில் ஏற்றிக்கொண்டு கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஈச்சர் வேன் எந்தவித சிக்னலும் போடாமல் வலதுபுறமாகத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிலை தடுமாறி பின்னால் வந்து கொண்டிருந்த கார், ஈச்சர் வேன் மீது மோதியது. இதில் காரில் இருந்த அக்னிஸ்வரனின் பாட்டி ராஜகுமாரிக்கு காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அக்னீஸ்வரன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விபத்துக்குக் காரணமான ஈச்சர் வேன் ஓட்டுநர் செட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேல் என்பவரின் மகன் அக்னிஸ்வரன் (வயது 25) இவர் நேற்று தனது பாட்டி ராஜகுமாரியை காரில் ஏற்றிக்கொண்டு கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள கோவில்பாளையம் அருகே வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஈச்சர் வேன் எந்தவித சிக்னலும் போடாமல் வலதுபுறமாகத் திரும்பியதாகக் கூறப்படுகிறது.
இதனால் நிலை தடுமாறி பின்னால் வந்து கொண்டிருந்த கார், ஈச்சர் வேன் மீது மோதியது. இதில் காரில் இருந்த அக்னிஸ்வரனின் பாட்டி ராஜகுமாரிக்கு காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அக்னீஸ்வரன் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் விபத்துக்குக் காரணமான ஈச்சர் வேன் ஓட்டுநர் செட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.