திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்: குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மறியல்..!

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பினர் வலியுறுத்தினர்.



திருப்பூர்: திருப்பூரில் தலை துண்டிக்கப்பட்டு இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் செரங்காடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் என்னும் இளைஞர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார்.

இவ்வழக்கில் காவல்துறையினர் 4 பேரை கைது செய்துள்ள சூழ்நிலையில் உயிரிழந்த இளைஞர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் வழக்கை எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதற்கான நிவாரணத் தொகையை குடும்பத்திற்கு பெற்றுத் தரவேண்டும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.



மேலும், குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும், திருப்பூர் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறக் கூடிய சூழ்நிலையில் பொதுமக்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் காவல்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை அமைப்பினர் திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...