தவறு செய்த வாலிபர்களை தட்டிக்கேட்டதால் அகமதுஷாவையும் சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
கோவை: கோவை குனியமுத்தூரில் சிறுவனை புகைபிடிக்க வைத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் அக்பில் அகமதுஷா(19). இவரது உறவினரான, 10 வயது சிறுவன், குறிச்சி குளம் சிமெண்ட் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த முகமது அப்சல் (19) உள்ளிட்ட 10 பேர் சிறுவனை புகை பிடிக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இது பற்றி அறிந்த அக்பில் அகமதுஷா, தவறு செய்த வாலிபர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், அகமதுஷாவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய குனியமுத்தூர் போலீசார், 4 பேரை கைது செய்தனர்.
கோவை, கரும்புக்கடையை சேர்ந்தவர் அக்பில் அகமதுஷா(19). இவரது உறவினரான, 10 வயது சிறுவன், குறிச்சி குளம் சிமெண்ட் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்த முகமது அப்சல் (19) உள்ளிட்ட 10 பேர் சிறுவனை புகை பிடிக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இது பற்றி அறிந்த அக்பில் அகமதுஷா, தவறு செய்த வாலிபர்களை தட்டிக்கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள், அகமதுஷாவை சரமாரியாக அடித்து உதைத்தனர்.
பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய குனியமுத்தூர் போலீசார், 4 பேரை கைது செய்தனர்.