நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் வியாழக்கிழமை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி வரும் வியாழக்கிழமை 6 மணிக்கு மேல் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய கூடாது என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.