ஓங்கி அறைந்த போதை ஆசாமி சுருண்டு விழுந்து பலியான கூலித்தொழிலாளி: போத்தனூர் போலீஸ் விசாரணை

கோணவாய்க்கால் பாளையம் பகுதியில், குடிபோதையில் வந்த வாலிபர் கூலித்தொழிலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் ஓங்கி அறைந்த நிலையில், சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.


கோவை: குடிபோதையில் வந்த வாலிபர் கூலித்தொழிலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் ஓங்கி அறைந்தநிலையில், சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கோவை போத்தனூர் கோணவாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 40) கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு போத்தனூர் பகுதியில் நின்று இருந்தார்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் குடிபோதையில் அந்த வழியாகச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி தகராற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த கந்தசாமி அந்த வாலிபரிடம் சென்று எதற்காக ரோட்டில் செல்பவர்களிடம் தகராற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என கேட்டார்.

இதனால் கந்தசாமிக்கு, அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கந்தசாமியைத் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் கந்தசாமி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த வழியாக சென்றவர்கள் கந்தசாமி இறந்து கிடப்பதைப் பார்த்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் ராஜா (22) என்பவர் கந்தசாமி அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டேவிட் ராஜாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...