திருப்பூரில் செல்போன் வழிப்பறியின் பொது ஏற்பட்ட தகராறில் பனியன் நிறுவன தொழிலாளி தலை துண்டித்து கொலை..!

இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், துண்டிக்கப்பட்ட தலையை தேடும் பணி நடந்து வருகிறது.


திருப்பூர்: திருப்பூரில் செல்போன் வழிப்பறியின் பொது ஏற்பட்ட தகராறில் பனியன் நிறுவன தொழிலாளி தலையை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). இவரது நண்பர் திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22). இவர்கள் இருவரும் திருப்பூர் எஸ் ஏ பி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். அந்த நிறுவனத்தில் வேலை சரியாக இல்லாததால் நண்பர்கள் இருவரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேரங்காட்டில் உள்ள வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சதீஷ் மற்றும் ரஞ்சித் இருவரும் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். இதன் பின்னர் இரவு 10 மணி அளவில் செரங்காடு காட்டுப்பகுதி வழியாக இருவரும் நடந்து வந்துள்ளனர்.

அப்போது, 3 மோட்டார் சைக்கிளில் 5 பேர் கொண்ட கும்பல் வந்து, சதீஷிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறிக்க முயன்றனர். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த கும்பல் சதீசை மோட்டார் சைக்கிளில் தூக்கிச் சென்று கொலை செய்து தலையை துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர்.



இதையடுத்து, வெட்டுக் காயங்களுடன் உயிருக்குப் போராடிய ரஞ்சித் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நல்லூர் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்துள்ளன. சதீஷின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தலையை தேடும் பணி நடந்து வருகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...