வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை அதிகாரிகளின் சோதனையில், 1.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், பறிமுதல் செய்யப்பட்டு வட்டார கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தற்போது வரை, 1.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்து மண்டலத்துக்குட்பட்ட மாநகராட்சியில் மட்டும் 42 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என்றனர்
கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில், 72 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 24 மணி நேர தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-
ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம், பறிமுதல் செய்யப்பட்டு வட்டார கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தற்போது வரை, 1.27 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்து மண்டலத்துக்குட்பட்ட மாநகராட்சியில் மட்டும் 42 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என்றனர்