நீலகிரியில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு துவக்கம்..!

நீலகிரியில் வடக்கு, தெற்கு வன கோட்டத்தில், 21 இடங்களில் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 21 இடங்களில் ஒரே நேரத்தில் துவங்கியது.

நீலகிரி மாவட்டத்தில், வனத்துறை சார்பில், நீலகிரி தெற்கு, வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மலைத் தொடர், சதுப்பு நிலங்களில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு துவங்கியது.

இதனையொட்டி, நேற்று காலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் வனத்துறை ஊழியர்கள், பறவை ஆர்வலர்களுக்கு மாவட்ட வன அலுவலர் சச்சின், பறவைகள் ஆர்வலர் ரங்கசாமி ஆகியோர் பயிற்சி மற்றும் ஆலேசானைகளை வழங்கினர்.

இது குறித்து மாவட்ட வன அலுவலர் சச்சின் நிருபர்களிடம் கூறுகையில்:-

நீலகிரியில், வடக்கு, தெற்கு வன கோட்டத்தில், 21 இடங்களில் ஒரே நேரத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. இன்று மாலை வரை நடைபெறுகிறது.

இதில், நீலகிரி வாழ் பறவைகள், இடம் பெயர்ந்து வந்த பறவைகள், அரிய வகை பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதன் முடிவுகள் ஆய்வுக்குப் பின்பு அறிவிக்கப்படும்,' என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...