நீலகிரி மாவட்டத்திற்கு பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி: காதலர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் ரோஜா விற்பனை அமோகமாக உள்ளது.
ஊட்டியில் காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ரோஜாக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
பெங்களூர் ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட, ரோஜா உட்பட பல்வேறு மலர்களின் விற்பனை குன்னுாரில் களை கட்டியுள்ளது.
உலகம் முழுதும் இன்று 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதனால், குன்னுார் சிம்ஸ்பூங்கா உட்பட சுற்றுலா மைய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரோஜா வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரு ரோஜா மலர், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல, ஒரு லில்லியம் மலர், 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'கார்னேஷன், ஸ்பிரே கார்னேஷன், கிரிசாந்தம், பேர்ட் ஆப்பேரடைஸ், ஜெர்பரா, ஆந்தோரியம்,' உள்ளிட்ட மலர்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இந்த மலர்களுக்கு கடைகளில், ஆன்லைனில் முன்பதிவும் செய்யப்படுகிறது.
ஊட்டியில் காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ரோஜாக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
பெங்களூர் ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட, ரோஜா உட்பட பல்வேறு மலர்களின் விற்பனை குன்னுாரில் களை கட்டியுள்ளது.
உலகம் முழுதும் இன்று 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.
இதனால், குன்னுார் சிம்ஸ்பூங்கா உட்பட சுற்றுலா மைய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரோஜா வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரு ரோஜா மலர், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல, ஒரு லில்லியம் மலர், 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'கார்னேஷன், ஸ்பிரே கார்னேஷன், கிரிசாந்தம், பேர்ட் ஆப்பேரடைஸ், ஜெர்பரா, ஆந்தோரியம்,' உள்ளிட்ட மலர்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இந்த மலர்களுக்கு கடைகளில், ஆன்லைனில் முன்பதிவும் செய்யப்படுகிறது.