பல்லடத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு, சிறையில் உள்ள 13 நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - மாவட்ட காவல்துறை நடவடிக்கை.

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள 13 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஆள் கடத்தலில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ள 13 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த 15.12.21 அன்று தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் மாலி, சதீஷ் போன் இக்ரய், கஞ்சுன் முன்னா ஆகியோர் பணி முடித்து கரைப்புதூர், லட்சுமி நகரில் இருந்து முருகம்பாளையம் செல்லும் ரோட்டில் கே. பி.என். கம்பெனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு இன்னோவா காரில் வந்த 4 நபர்கள் நடந்து சென்ற மூவரையும் காரில் கடத்திச் சென்றனர். கை, கால்களை, கம்பி மற்றும் பிளாஸ்டிக் பைப் ஆகியவற்றாலும் தாக்கி, மூவரின் உறவினர்களிடம் பணம் ரூபாய் . 3,00,000 / கேட்டு மிரட்டியும் அதில் ரூபாய் .27,500 / - ஐ ஆன்லைனில் பெற்றுக்கொண்டு 18.12.201 அன்று கோவை பேருந்து நிலையத்தில் மூவரையும் இறக்கிவிட்டு தப்பியோடினர் .



இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரனை செய்த பல்லடம் போலீசார், மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட அசாமை சேர்ந்த பாப்பு மியாஸ், பீகாரை சேர்ந்த நிஷாஅன்சாரி, ராஜ்குமார், சிவகங்கையை சேர்ந்த அமர்நாத் மற்றும் முத்துப்பாண்டி உள்ளிட்ட 13 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



மேலும், விசாரணை மேர்கொண்டதில், அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, 13 பேரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் அவர்களின் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் வினித் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான உத்தரவைபிறப்பித்தார் .

இன்று சிறையில் இருந்த 13 நபர்களிடமும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு வழங்கப்பட்டது.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...