கொரோனா விழிப்புணர்வு சாதனையாக சிறுவன் ரூபேஷ், சரவணன் என்ற மாணவருடன் இணைந்து 10 கி.மீ. தூரம் தொடர்ந்து ஓடிக்கொண்டே ஒற்றை சிலம்பம் சுழற்றி செய்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம் சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த குணசேகரன், ஜெயந்தி தம்பதியினரின் மகன் ரூபேஷ் (6) கராத்தே பயிற்சியுடன் சிலம்பமும் கற்று வருகிறார்.

இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு சாதனையாக, சில தினங்களுக்கு முன் சிறுவன் ரூபேஷ், சரவணன் என்ற மாணவருடன் இணைந்து பத்து கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடிக்கொண்டே ஒற்றை சிலம்பம் சுழற்றி சாதனை முயற்சியில் ஈடுப்பட்டனர்.

சின்னவேடம்பட்டியில் துவங்கி கோவில்பாளையம் வரை சென்று மீண்டும் கீரணத்தம் வழியாக சின்னவேடம்பட்டி வந்து சேர்ந்தனர். இவர்களின் இந்த சாதனை தற்போது நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா விழிப்புணர்வு சாதனையாக, சில தினங்களுக்கு முன் சிறுவன் ரூபேஷ், சரவணன் என்ற மாணவருடன் இணைந்து பத்து கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடிக்கொண்டே ஒற்றை சிலம்பம் சுழற்றி சாதனை முயற்சியில் ஈடுப்பட்டனர்.
சின்னவேடம்பட்டியில் துவங்கி கோவில்பாளையம் வரை சென்று மீண்டும் கீரணத்தம் வழியாக சின்னவேடம்பட்டி வந்து சேர்ந்தனர். இவர்களின் இந்த சாதனை தற்போது நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.