கோவை புதூர் பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்து மின்சார மோட்டார் ஒன்றை திருடிச் சென்றனர்.
கோவை: கோவையில் மின் மோட்டார் திருடிய 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை பி கே புதூர் பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் சௌந்தர்ராஜன்(63). இவர் கோவை புதூர் பகுதியில் உளள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 3 மர்ம நபர்கள் பாலிடெக்னிக் கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்து கல்லூரி வளாகத்திற்குள் வந்து மின்சார மோட்டார் ஒன்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சௌந்தரராஜன் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரமேஷ் (19), குமார் என்பவரின் மகன் குணா (19) கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (19) ஆகிய மூவரும் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மின் மோட்டாரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை பி கே புதூர் பகுதியை சேர்ந்த தங்கமணி என்பவரின் மகன் சௌந்தர்ராஜன்(63). இவர் கோவை புதூர் பகுதியில் உளள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 3 மர்ம நபர்கள் பாலிடெக்னிக் கல்லூரியின் காம்பவுண்ட் சுவரை தாண்டிக் குதித்து கல்லூரி வளாகத்திற்குள் வந்து மின்சார மோட்டார் ஒன்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சௌந்தரராஜன் மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ரமேஷ் (19), குமார் என்பவரின் மகன் குணா (19) கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (19) ஆகிய மூவரும் கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து மின் மோட்டாரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.