பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.
கோவை: பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில், வாக்குச்சாவடி மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா, பதட்டமான வாக்குச்சாவடிகள் ஏதேனும் உள்ளதா, என்பது குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான பொருட்களைப் பார்வையிட்டார். பின் அரசு விதித்துள்ள கொரோனா நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி, மற்றும் ஆனைமலை உள்ளிட்ட பேரூராட்சிகளில், தேர்தல் பணிகள் குறித்து கோவை மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஹர் சகாய் மீனா ஆய்வு செய்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில், வாக்குச்சாவடி மையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா, பதட்டமான வாக்குச்சாவடிகள் ஏதேனும் உள்ளதா, என்பது குறித்துக் கேட்டறிந்தார்.
மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான பொருட்களைப் பார்வையிட்டார். பின் அரசு விதித்துள்ள கொரோனா நோய் கட்டுப்பாட்டு விதிகளை கடைப்பிடித்துத் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், 100 சதவீதம் வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆய்வின்போது, பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ், கோவை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங், உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.