வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமால், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செல்வ நவரத்தினம் பாராட்டினார்.
கோவை:கோவையில் தனியார் டாக்ஸி என்ற நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்த நபர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சென்னையை சேர்ந்த கணவன்- மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், 20 செல்போன்கள், உருட்டுக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9-ம் தேதி காலை, கோவை வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓணாம்பாளையம் ,அருகே ரெட் டாக்ஸி ஓட்டுனர் சோனு என்பவர் அவரது டாக்ஸி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் 103/2022, 147 உட்பட சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில், சென்னையை சேர்ந்த ஸ்டீபன் 45, கடந்த 8-ம் தேதி இரவு கடைசியாக கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்ததும் அவருடைய மனைவி அமலோற்பவம் அவருடன் சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்கள் இருவரையும் சென்னையில் வைத்து தனிப்படையினர் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.
விசாரணையில்,கால் டாக்சி டிரைவரை கட்டையால் அடித்தும், விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து உருட்டுக்கட்டை, 20 -க்கும் மேற்பட்ட செல்போன்கள் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஸ்டீபன் மீது 4 கொலை வழக்குகள், அவருடைய மனைவி அமலோற்பவம் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொள்ளை அடிக்க, விஷ ஊசி செலுத்தி கொலை செய்து விட்டு பின்னர், கொள்ளை அடித்து வருவதைவழக்கமாக கொண்டுள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமால், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செல்வ நவரத்தினம் பாராட்டினார்.
கடந்த 9-ம் தேதி காலை, கோவை வடவள்ளி காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஓணாம்பாளையம் ,அருகே ரெட் டாக்ஸி ஓட்டுனர் சோனு என்பவர் அவரது டாக்ஸி அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து வடவள்ளி போலீசார் 103/2022, 147 உட்பட சந்தேக மரணம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. விசாரணையில், சென்னையை சேர்ந்த ஸ்டீபன் 45, கடந்த 8-ம் தேதி இரவு கடைசியாக கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்ததும் அவருடைய மனைவி அமலோற்பவம் அவருடன் சென்றதும் தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்கள் இருவரையும் சென்னையில் வைத்து தனிப்படையினர் கைது செய்து கோவை அழைத்து வந்தனர்.
விசாரணையில்,கால் டாக்சி டிரைவரை கட்டையால் அடித்தும், விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்து விட்டு தப்பி சென்றதும் தெரியவந்தது.
அவர்களிடமிருந்து உருட்டுக்கட்டை, 20 -க்கும் மேற்பட்ட செல்போன்கள் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் ஸ்டீபன் மீது 4 கொலை வழக்குகள், அவருடைய மனைவி அமலோற்பவம் மீது 2 கொலை வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொள்ளை அடிக்க, விஷ ஊசி செலுத்தி கொலை செய்து விட்டு பின்னர், கொள்ளை அடித்து வருவதைவழக்கமாக கொண்டுள்ளனர்.
துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்த துணைக் காவல் கண்காணிப்பாளர் திருமால், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி ஆகியோரை மாவட்ட எஸ்.பி. செல்வ நவரத்தினம் பாராட்டினார்.