கோவை சூலூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி..!

அத்துமீறித் தாக்குதல் நடத்தியது, சாதிய வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள போகம்பட்டி அடுத்த பொன்னாங்காணி பகுதியில் வசித்து வருபவர் மயில்சாமி, பால் வியாபாரியான இவர் சம்பவத்தன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளார்.

இதில் விற்பனைக்காக கொண்டு சென்ற பால் தெருவில் கொட்டி வீணாகியது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனைத் தடுக்க வந்த மயில்சாமியின் குடும்பத்தினரும், கேசவன் குடும்பத்தினரும், சண்டையிட்டுக் கொண்டதால் இருதரப்புக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கேசவனை அவரது வீடு புகுந்து மயில்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதில் அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்டமாக, பொன்னாங்காணி பகுதியைச் சேர்ந்த பாலகுரு, பூபதி, மயில்சாமி, மாரிமுத்து, மோகன்ராஜ், கணேஷ், செந்தில் ஆகிய 8 பேர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது, சாதிய வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...