கோவை சிவானந்தாகாலணி பகுதியில் மருந்தக உரிமையாளரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட முதியவர் புகார்..!

மேலும், தாக்குதல் நடத்திய 15 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடையில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்கள், பணத்தை மீண்டும் திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.


கோவை: கோவை சிவானந்தாகாலணி பகுதியில் மருந்தக உரிமையாளரை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட முதியவர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பிரதீப் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கடந்த 1986 முதல் மருந்தகம் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பிரதீப் குமார் சுமார் 15 பேருடன் வந்து சீனிவாசனை தாக்கியதாகவும், கடையில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சீனிவாசன் கோவை மாநகர காவல் ஆணையாளர் புகார் அளித்தார்.

இது குறித்து சீனிவாசன் கூறும்போது:-

வாடகையை உயர்த்துவது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதீப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கடைக்கு வந்த பிரதீப் மற்றும் அவரது நண்பர்கள் 15 பேர் கடைக்குள் புகுந்து மின் இணைப்பைத் துண்டித்து உள்ளே இருந்த பணம் மற்றும் மருந்து பொருட்களை சேதப்படுத்தி சென்றனர். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளிக்கச் சென்ற போது, போலீசார் புகாரை ஏற்க மறுப்பதாகவும் தன் மீது வழக்கு பதிவு செய்வோம் என போலீசார் மிரட்டுவதால் சீனிவாசன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.

மேலும், தாக்குதல் நடத்திய பிரதீப் உள்ளிட்ட 15 பேர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடையில் இருந்து எடுத்துச் சென்ற பொருட்கள், பணத்தை மீண்டும் திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...