புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு சங்கரையும், அவரது நண்பர்களையும் தாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவையில் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் விஷ்ணு சங்கர் (19). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் ஹரிஹரன் மற்றும் சிவராமன் உடன் சேர்ந்து நேற்று மாலை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செருப்பு வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணு சங்கர் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் விஷ்ணு சங்கரையும் அவரது நண்பர்களையும் அடித்து உதைத்தனர். இதில் அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஷ்ணு சங்கர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு சங்கரையும் அவரது நண்பர்களையும் தாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் விஷ்ணு சங்கர் (19). இவர் பீளமேடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார்.
இவர் தனது நண்பர்கள் ஹரிஹரன் மற்றும் சிவராமன் உடன் சேர்ந்து நேற்று மாலை காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் செருப்பு வாங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 3 வாலிபர்கள் விஷ்ணு சங்கர் மற்றும் அவரது நண்பர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். தகராறு முற்றிய நிலையில் விஷ்ணு சங்கரையும் அவரது நண்பர்களையும் அடித்து உதைத்தனர். இதில் அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து, அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விஷ்ணு சங்கர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு சங்கரையும் அவரது நண்பர்களையும் தாக்கியது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.