இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணம் கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1,65,400 ரூபாயை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி, பறக்கும்படை குழுவினர்- II (FST ॥) 10.02.2022 அன்று காலை 9.10 மணியளவில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.18-க்குட்பட்ட நல்லாம்பாளையம், எம்.ஆர்.காம்பிளக்ஸ் எதிரில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, எவ்விதமான உரிய ஆவணங்களுமின்றி கொண்டு சென்ற ரூ.1,65,400/- (ரூபாய் ஒரு இலட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்து நானூறு மட்டும்) கைப்பற்றப்பட்டது.
இதையடுத்து, கோவை ரேஸ்கோஸ் பகுதியில் உள்ள சார்பு கருவூல அலுவலா் அவா்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு, கோவை மாவட்ட தெற்கு உதவி கருவூல அலுவலரிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.