ரூ.270 கோடி பாசி ஊழல் வழக்கில் தீர்ப்பு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவு..!

திருப்பூரில், 2011ம் ஆண்டு வரை செயல்பட்ட 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் 1,433 பேரிடம், 870 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது.


திருப்பூர்: 'பாசி' நிறுவன மோசடி வழக்கில் தீர்ப்பு அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

திருப்பூரில், 2011ம் ஆண்டு வரை செயல்பட்ட, 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், 1,433 பேரிடம், 870 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது.

இதையடுத்து, அந்நிறுவன இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கதிரவன், கடந்தாண்டு இறந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சி.பி.ஐ., தரப்பு சாட்சி விசாரணை நிறைவடைந்து, இரு தரப்பு வாதத்துக்கு 'வாய்தா' போடப்பட்டது. எதிர்தரப்பு வக்கீல்கள் வாதிடாமல், தொடர்ந்து அவகாசம் கேட்டு வந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரு தரப்பு வாதம் நடந்து முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்தது.

அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவு நகல் ஒன்றை நீதிபதியிடம் கொடுத்த எதிர் தரப்பு வக்கீல், 'இவ்வழக்கில், விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க, மார்ச் 31 வரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது' என தெரிவித்தார். உத்தரவு நகலை பார்த்த நீதிபதி ரவி, வழக்கை ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...