மேலும், கஞ்சா கடத்திய இருவரை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே போலீசாரின் தீவிர வாகன சோதனையில் சிக்கிய 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் ஆய்வாளர் கண்ணனுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து, உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பெரியநாயக்கன்பாளையம் கட்டாஞ்சி மலைப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியுள்ளனர்.
பின்னர், அவர்களை விரட்டிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸ் பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஒருவன் பெயர் ராமு பிரகாஷ் (19) என்பதும், தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியை சேர்ந்தவன் என்பதும், மற்றொருவன் ஊட்டி புளூ மவுண்டன் பகுதியை சேர்ந்த சரண் (20) என்பதும், தற்போது பெரியநாயக்கன்பாளையம் வஞ்சிமா நகர் பகுதியில் தற்போது தங்கியிருப்பதும், சட்டவிரோதமாக விற்பனைக்காக வெள்ளை நிற சாக்கு பையில் 18 கிலோ கஞ்சாவினை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் காவல் ஆய்வாளர் கண்ணனுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக இரகசிய தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து, உதவி ஆய்வாளர் முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பெரியநாயக்கன்பாளையம் கட்டாஞ்சி மலைப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் போலீசாரை கண்டதும் தப்பியுள்ளனர்.
பின்னர், அவர்களை விரட்டிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். இதனையடுத்து, அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸ் பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் ஒருவன் பெயர் ராமு பிரகாஷ் (19) என்பதும், தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியை சேர்ந்தவன் என்பதும், மற்றொருவன் ஊட்டி புளூ மவுண்டன் பகுதியை சேர்ந்த சரண் (20) என்பதும், தற்போது பெரியநாயக்கன்பாளையம் வஞ்சிமா நகர் பகுதியில் தற்போது தங்கியிருப்பதும், சட்டவிரோதமாக விற்பனைக்காக வெள்ளை நிற சாக்கு பையில் 18 கிலோ கஞ்சாவினை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.