வால்பாறை அருகே தண்ணீர் குடிக்க சென்ற போது சேற்றில் சிக்கிய காட்டெருமை - 2 மணிநேர போராட்டத்திற்கு பின் மீட்பு..!

மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு எருமை தண்ணீர் குடிப்பதற்காக அருகிலுள்ள குட்டையில் இறங்கியுள்ளது.


கோவை: வால்பாறை பகுதியில் தண்ணீர் குடிக்க சென்ற காட்டெருமை சேற்றில் சிக்கி தவித்த நிலையில், இரண்டு மணி நேரமாக போராடி வனத்துறையினர் மீட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு எருமை தண்ணீர் குடிப்பதற்காக அருகிலுள்ள குட்டையில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், குட்டையில் இறங்கிய காட்டெருமை சேற்றில் சிக்கி வெகுநேரமாக வெளியேற முடியாமல் போராடி உள்ளது. இதைக்கண்ட எஸ்டேட்டில் பணிசெய்த தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் மனித விலங்கு மோதல் தடுப்பு குழுவினர் சேற்றில் சிக்கித் தவித்த காட்டெருமையை வெளியே கொண்டுவருவதற்காக முயற்சிகளை மேற்கொண்டனர்.



சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காட்டெருமையை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். சேற்றில் சிக்கி தவித்த காட்டெருமை வெளியில் வந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் வனப்பகுதிக்குள் சென்றது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...