கர்நாடக அரசை கண்டித்து கோவையில் தமுமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கர்நாடக அரசை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு சில தினங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை விதித்தது. இதற்கு இஸ்லாம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து செல்லும் பொழுது சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து அம்மாணவியின் பின்னால் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

அப்பொழுது அந்தப் பெண் தனியாளாக அல்லாஹு அக்பர் என்ற முழக்கமிட்டபடி நடந்து செல்கிற வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வெளியான நிலையில், இச்சம்பவத்திற்கு பெரும்பாலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாகக் கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கர்நாடக அரசைக் கண்டித்தும் அச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



உடை அணிவது என்பது அவரவர் விருப்பம் தெரிவித்த அவர்கள் ஹிஜாப் அணிவது என்பது எங்கள் மத கோட்பாடு என்றும் தெரிவித்தனர். மேலும் ஹிஜாப் அணிவதால் பிறருக்கு ஏன் கோபம் வருகிறது எனவும் கேள்வி எழுப்பினர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...