கர்நாடக அரசை கண்டித்து கோவையில் தமுமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கர்நாடக அரசை கண்டித்து கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கர்நாடக அரசு சில தினங்களுக்கு முன்பு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்குத் தடை விதித்தது. இதற்கு இஸ்லாம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய தினம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து செல்லும் பொழுது சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து அம்மாணவியின் பின்னால் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

அப்பொழுது அந்தப் பெண் தனியாளாக அல்லாஹு அக்பர் என்ற முழக்கமிட்டபடி நடந்து செல்கிற வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வெளியான நிலையில், இச்சம்பவத்திற்கு பெரும்பாலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், இச்சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாகக் கோவை உக்கடம் பகுதியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஹிஜாப் அணிந்து கொண்டு கர்நாடக அரசைக் கண்டித்தும் அச்சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.



உடை அணிவது என்பது அவரவர் விருப்பம் தெரிவித்த அவர்கள் ஹிஜாப் அணிவது என்பது எங்கள் மத கோட்பாடு என்றும் தெரிவித்தனர். மேலும் ஹிஜாப் அணிவதால் பிறருக்கு ஏன் கோபம் வருகிறது எனவும் கேள்வி எழுப்பினர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...