கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை: கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் பிரிவு ஆர் பி எஃப் சப் இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி தலைமையில், ஈரோட்டில் கோவையிலிருந்து சென்னை சென்ற ரயிலில் டி 4 கோச்சில் சோதனை செய்தனர்.
அப்போது கோவை செல்வபுரம் சரோஜினி நகர் பகுதியில் வசிக்கக்கூடிய அழகிரி 46 என்பவர் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களைக் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குக் கொண்டு செல்வது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சேலம் ரோவிங் ஸ்குவாட் ஸ்ரீ ஆர் பிரகாஷ் மாநில வரி அதிகாரியிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த ஆபரணத் தங்கத்தின் மொத்த மதிப்பு கோடியே 78 லட்சத்து 54 ஆயிரத்து 200 ஆகும்.
அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த மதிப்பு 10 லட்சத்து 71 ஆயிரத்து 252 ஆகும். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.