கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா வருகிற 14-ஆம் தேதி திங்கட்கிழமை முகூர்த்த கால் நடும் விழாவுடன் தொடங்கவுள்ளது.
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா வருகிற 14-ஆம் தேதி திங்கட்கிழமை முகூர்த்த கால் நடும் விழாவுடன் தொடங்கவுள்ளது.
தொடர்ந்து, 15- ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன், தேர் திருவிழா நடக்கவுள்ளது. 21-ந் தேதி கிராமசாந்தி, 22-ஆம் தேதி கொடியேற்றமும், இரவு 7.30 மணிக்கு அக்கினிச்சட்டி விழா நடக்கிறது. அதே போல், 23-ஆம் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் என தொடர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது
மேலும், 24-ஆம் தேதி கிளி வாகனம், 25-ஆம் தேதி சிம்மவாகனம் 26-ந் தேதி அன்ன வாகனம், 27 -ஆம் தேதி காமதேனு வாகனத்திலும்,
28-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கும்.
பின்னர், மார்ச் 1-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜவீதி தேர் நிலைத் திடல்லிருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, வைசியாள் வீதி, வழியாக மீண்டும் தேர் திடலை அடையும் இதனை தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி பரிவேட்டை குதிரை வாகன உலா 4 -ம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் 5 ஆம் தேதி தீர்த்தவாரி கொடி இறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.
மேலும், மார்ச் 6-ஆம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் தலைவர் செல்வம் பெரியசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, 15- ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன், தேர் திருவிழா நடக்கவுள்ளது. 21-ந் தேதி கிராமசாந்தி, 22-ஆம் தேதி கொடியேற்றமும், இரவு 7.30 மணிக்கு அக்கினிச்சட்டி விழா நடக்கிறது. அதே போல், 23-ஆம் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் என தொடர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது
மேலும், 24-ஆம் தேதி கிளி வாகனம், 25-ஆம் தேதி சிம்மவாகனம் 26-ந் தேதி அன்ன வாகனம், 27 -ஆம் தேதி காமதேனு வாகனத்திலும்,
28-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கும்.
பின்னர், மார்ச் 1-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ராஜவீதி தேர் நிலைத் திடல்லிருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, வைசியாள் வீதி, வழியாக மீண்டும் தேர் திடலை அடையும் இதனை தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி பரிவேட்டை குதிரை வாகன உலா 4 -ம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் 5 ஆம் தேதி தீர்த்தவாரி கொடி இறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.
மேலும், மார்ச் 6-ஆம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் தலைவர் செல்வம் பெரியசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.