கோவையில் மர்மான முறையில் இறந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் மர்மான முறையில் ரெட் டாக்சி (Red taxi)ஓட்டுநர் இறந்ததையடுத்து, ஓட்டுநரின் குடும்பத்திற்கு உடனடியாக இழப்பீடு வழங்க கோரி 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை வடவள்ளி ஓணம்பாளையம் தனியார் விடுதி அருகே டாக்ஸி ஓட்டுநர் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்டு, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை வடவள்ளி ஓணம்பாளையம் தனியார் விடுதி அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்குச் சென்ற போலீஸார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் கட்ட விசாரனையில் சடலமாக மீட்கப்பட்டவர். கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த சனு(28) என்பதும், ரெட் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணி புரிந்து வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து சக ஓட்டுநர்கள் கூறும் போது நேற்று இரவு அவர் தொண்டாமுத்தூர் பகுதியில், வாடகை சென்றதாகவும், அப்போது தொண்டாமுத்தூர் ஓணம்பாளையம் தனியார் விடுதியிலிருந்து கோவை விமான நிலையம் வரை செல்ல வேண்டும் என சனுக்கு அழைப்பு வந்ததாகவும், அங்கு சென்ற பிறகு செல்போன், ஜி.பி.எஸ். இணைப்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

மேலும், சனு உடல் கார் பின்புறத்தில், தலை, முதுகு பகுதிகளில் ரத்த காயங்கள் இருந்ததாகவும், பணம் வைக்கும் பாக்கெட் வெளியே வந்திருந்ததாகத் தெரிவித்தனர். அதே போல் காரில் ஏதே பொடி தூவி இருந்ததாகத் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்தநிலையில், மர்மமான முறையில் இறந்த டாக்சி டிரைவரின் குடும்பத்தாருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கை தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, 200 க்கும் மேற்பட்ட ரெட் டாக்சி டிரைவர்கள், சாய்பாபா காலனியில் உள்ள ரெட் டாக்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...