கோவையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகின்ற போதிலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்குச் சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகின்ற போதிலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்குச் சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது தவிர கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றைக் கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது. கொரோனா பரவல் சதவீதம் தற்போது 3.31 ஆக உள்ளது. ஆனாலும் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,’’ என்றார்.
கோவை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இது தவிர கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றைக் கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது. கொரோனா பரவல் சதவீதம் தற்போது 3.31 ஆக உள்ளது. ஆனாலும் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,’’ என்றார்.