இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின் தென்னிந்தியப் பிராந்திய சபை, சிறந்த பிராந்திய சபையாகத் தேர்வு

ஐசிஏஐ’யின் கோவை கிளையின் முன்னாள் தலைவரான பட்டயக் கணக்கறிஞர் கே.ஜலபதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையில் பட்டயக் கணக்கறிஞர்களின் நலனுக்காகவும் சிஏ., மாணவர்களின் நலனுக்காகவும் செயலாற்றி வருகிறார்.


கோவை: இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின்(ஐசிஏஐ) தென்னிந்தியப் பிராந்திய சபை, 2021 – 2022 ஆம் ஆண்டின் சிறந்த பிராந்திய சபையாக ஐசிஏஐ’யால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

பட்டயக் கணக்கறிஞர் கே. ஜலபதி அவர்களை தலைவராகக் கொண்டுள்ள 'ஐசிஏஐ’யின் தென்னிந்தியச் சபையானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி, லக்‌ஷதீப் தீவுகள் பகுதிகளில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்கறிஞர்களுக்கும் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சேவையாற்றி வருகிறது.

பிப்ரவரி 4 ஆம் தேதியன்று புது டெல்லியில் நடைபெற்ற 'ஐசிஏஐ’யின் 72ஆம் ஆண்டின் வருடாந்திர விழாவில் மத்திய அரசின் இணை நிதித்துறை அமைச்சரான முனைவர். பக்வத் கிருஷ்ணராவ் காரட் அவர்கள் இவ்விருதினை 'ஐசிஏஐ’யின் தென்னிந்தியப் பிராந்திய சபையின் தலைவர் பட்டயக் கணக்கறிஞர் கே. ஜலபதியிடம் வழங்கினார். 'ஐசிஏஐ’யின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சூழ இப்பெருமைக்குரிய விருதினை அவர் பெற்றார்.

ஐசிஏஐ’யின் கோவை கிளையின் முன்னாள் தலைவரான பட்டயக் கணக்கறிஞர் கே.ஜலபதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையில் பட்டயக் கணக்கறிஞர்களின் நலனுக்காகவும் சிஏ., மாணவர்களின் நலனுக்காகவும் செயலாற்றி வருகிறார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...