ஐசிஏஐ’யின் கோவை கிளையின் முன்னாள் தலைவரான பட்டயக் கணக்கறிஞர் கே.ஜலபதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையில் பட்டயக் கணக்கறிஞர்களின் நலனுக்காகவும் சிஏ., மாணவர்களின் நலனுக்காகவும் செயலாற்றி வருகிறார்.
கோவை: இந்தியப் பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனத்தின்(ஐசிஏஐ) தென்னிந்தியப் பிராந்திய சபை, 2021 – 2022 ஆம் ஆண்டின் சிறந்த பிராந்திய சபையாக ஐசிஏஐ’யால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பட்டயக் கணக்கறிஞர் கே. ஜலபதி அவர்களை தலைவராகக் கொண்டுள்ள 'ஐசிஏஐ’யின் தென்னிந்தியச் சபையானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி, லக்ஷதீப் தீவுகள் பகுதிகளில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்கறிஞர்களுக்கும் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சேவையாற்றி வருகிறது.
பிப்ரவரி 4 ஆம் தேதியன்று புது டெல்லியில் நடைபெற்ற 'ஐசிஏஐ’யின் 72ஆம் ஆண்டின் வருடாந்திர விழாவில் மத்திய அரசின் இணை நிதித்துறை அமைச்சரான முனைவர். பக்வத் கிருஷ்ணராவ் காரட் அவர்கள் இவ்விருதினை 'ஐசிஏஐ’யின் தென்னிந்தியப் பிராந்திய சபையின் தலைவர் பட்டயக் கணக்கறிஞர் கே. ஜலபதியிடம் வழங்கினார். 'ஐசிஏஐ’யின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சூழ இப்பெருமைக்குரிய விருதினை அவர் பெற்றார்.
ஐசிஏஐ’யின் கோவை கிளையின் முன்னாள் தலைவரான பட்டயக் கணக்கறிஞர் கே.ஜலபதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையில் பட்டயக் கணக்கறிஞர்களின் நலனுக்காகவும் சிஏ., மாணவர்களின் நலனுக்காகவும் செயலாற்றி வருகிறார்.
பட்டயக் கணக்கறிஞர் கே. ஜலபதி அவர்களை தலைவராகக் கொண்டுள்ள 'ஐசிஏஐ’யின் தென்னிந்தியச் சபையானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மற்றும் புதுச்சேரி, லக்ஷதீப் தீவுகள் பகுதிகளில் உள்ள சுமார் 60,000க்கும் மேற்பட்ட பட்டயக் கணக்கறிஞர்களுக்கும் சுமார் 3,00,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும் சேவையாற்றி வருகிறது.
பிப்ரவரி 4 ஆம் தேதியன்று புது டெல்லியில் நடைபெற்ற 'ஐசிஏஐ’யின் 72ஆம் ஆண்டின் வருடாந்திர விழாவில் மத்திய அரசின் இணை நிதித்துறை அமைச்சரான முனைவர். பக்வத் கிருஷ்ணராவ் காரட் அவர்கள் இவ்விருதினை 'ஐசிஏஐ’யின் தென்னிந்தியப் பிராந்திய சபையின் தலைவர் பட்டயக் கணக்கறிஞர் கே. ஜலபதியிடம் வழங்கினார். 'ஐசிஏஐ’யின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சூழ இப்பெருமைக்குரிய விருதினை அவர் பெற்றார்.
ஐசிஏஐ’யின் கோவை கிளையின் முன்னாள் தலைவரான பட்டயக் கணக்கறிஞர் கே.ஜலபதி கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையில் பட்டயக் கணக்கறிஞர்களின் நலனுக்காகவும் சிஏ., மாணவர்களின் நலனுக்காகவும் செயலாற்றி வருகிறார்.