நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தங்களையும், வாகனத்தையும் அடித்து நொறுக்கியதில் தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
கோவை: கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதிய ரீதியான தாக்குதல் நடத்துவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் பொன்னாகானி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த மனுவில், கடந்த ஜனவரி 7ம் தேதி தனது கணவர் ராமு வேலை முடித்துவிட்டு வரும் பொழுது தனது கணவரின் வண்டியின் மீது போகம்பட்டி பகுதியை சேர்ந்த கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவரது இருசக்கர வாகனம் உரசி சென்றதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை மனதில் வைத்துக்கொண்டு அந்த சாதியினர் 20 பேர் தனது வீட்டிற்கு வந்து தாக்கியதாகவும், தாங்கள் சத்தம் போட்டவுடன் அக்கம்பக்கத்தினர் திரண்டு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், இதனை மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து தங்களை மிரட்டி வந்ததாகவும் இரு தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் ஊருக்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் தங்களையும் தங்கள் வீட்டையும் வாகனத்தையும் அடித்து நொறுக்கியதில் தனது கணவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடுவதற்கும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் ஆதிக்க சாதியினர் தடை செய்து வருவதாகவும், இதனால் எங்கள் பகுதி மக்கள் பயத்தோடு இருந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.
கோவை மாவட்டம் பொன்னாகானி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த மனுவில், கடந்த ஜனவரி 7ம் தேதி தனது கணவர் ராமு வேலை முடித்துவிட்டு வரும் பொழுது தனது கணவரின் வண்டியின் மீது போகம்பட்டி பகுதியை சேர்ந்த கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவரது இருசக்கர வாகனம் உரசி சென்றதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை மனதில் வைத்துக்கொண்டு அந்த சாதியினர் 20 பேர் தனது வீட்டிற்கு வந்து தாக்கியதாகவும், தாங்கள் சத்தம் போட்டவுடன் அக்கம்பக்கத்தினர் திரண்டு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இதனை மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து தங்களை மிரட்டி வந்ததாகவும் இரு தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் ஊருக்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் தங்களையும் தங்கள் வீட்டையும் வாகனத்தையும் அடித்து நொறுக்கியதில் தனது கணவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடுவதற்கும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் ஆதிக்க சாதியினர் தடை செய்து வருவதாகவும், இதனால் எங்கள் பகுதி மக்கள் பயத்தோடு இருந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.