கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்த நலத்திட்ட பணிகளால் அதிமுக மகத்தான வெற்றிபெறும் - மாநகராட்சி 7வது வார்டு அதிமுக வேட்பாளர்

எஸ்.பி.வேலுமணி செய்த நலத்திட்ட பணிகளை மக்களிடம் கொண்டு சென்றாலே மாநகராட்சி 100 வார்டுகளிலும் அதிமுக மகத்தான வெற்றிபெறும் என கிருபாலினி கார்த்திகேயன் தெரிவித்தார்.



கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் கோவை மாவட்டத்தில் செய்த நலத்திட்ட பணிகளை மக்களிடம் கொண்டு சென்றாலே கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் அதிமுக மகத்தான வெற்றிபெறும் என மாநகராட்சி 7வது வார்டு அதிமுக வெற்றி வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சி 7வது வார்டிற்குட்பட்ட பி.எல்.எஸ். நகர் பகுதிகளில் வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் கிருபாலினி கார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். 



அவருக்கு, அப்பகுதி மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்து, கலந்துரையாடினார்.



அவருடன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மற்றும் கல்லூரி மாணவர்கள், கழக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.



அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றாலே, 7வது வார்டு மட்டுமல்லாமல் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் அதிமுக மகத்தான முழுமையான வெற்றியை பெரும் என்று உறுதிபட தெரிவித்தார்.

மேலும், 7வது வார்டை பொறுத்தவரை 1 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நவீன பூங்கா மற்றும் தனது சொந்த செலவில் பி.எல்.எஸ் நகர் பகுதியில் போர் அமைத்து குடிநீர் வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக கிருபாலினி கார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் 7வது வார்டு பகுதிகளில் எல்லா இடங்களிலும் எல்.இ.டி.விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...