நிர்வாக காரணங்களினால் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2021 - 22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள் 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெறப்பட்டன.
சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன நிலையில் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வரும் 11-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிர்வாக காரணங்களினால் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாறு கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள் 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெறப்பட்டன.
சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன நிலையில் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வரும் 11-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நிர்வாக காரணங்களினால் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாறு கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.