திருப்பூர் ராயபுரம் அருகே மலக்கழிவு கலந்த தண்ணீர் குடிநீர் குழாயில் வருவதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்..!

சுமார் 45 முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் ராயபுரம் அருகே மலக்கழிவு கலந்த தண்ணீர் குடிநீர் குழாயில் வருவதால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் ராயபுரம் அடுத்த சின்னா நகர் பகுதியில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக மலக்கழிவு தண்ணீர் கலந்து குடிநீர் குழாயில் தண்ணீர் வருவதால் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.



அதேபோல், சுமார் 45 முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மலம் கலந்த தண்ணீரை விநியோகம் செய்ததால் ஆத்திரமடைந்த சின்னா நகர் பகுதி மக்கள் ராயபுரம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் வடக்கு காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலில் இருந்து அப்பகுதி மக்களை கலைந்து செல்ல செய்தனர்.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...