நீலகிரி மாவட்டம் கடநாடு கிராமத்தில் புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் - மாவட்ட வன அலுவலர்.

ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் புலி தென்ப்பட்டால், அதன் வயது, பாலினம் ஆகியவை முடிவு செய்த பின்பு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் - வனத்துறையினர்



நீலகிரி: கடந்த ஒரு வாரமாக உதகை அருகே உள்ள கடநாடு கிராம குடியிருப்பு மற்றும் விவசாய நிலத்தில் புலி நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வன அதிகாரிகள், நகு புலியின் நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

புலியின் நடமாட்டம் காரணமாக, வெளியே வர மிகுந்த அச்சம் அடைந்துள்ள கிராம மக்கள், விவசாய பணிகளை மேற்கொள்ளாமல், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல முடியாமல் இருப்பதால், அவர்கள் வாழ்வாதாரம்பெரிதும் பாதிக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று மாவட்ட வன அலுவலர் சச்சின் துக்காராம் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் ஊழியர்கள், புலி நடமாடும் இடத்தில் தானியங்கி கேமரா பொருத்தும் பணியை மேற்கொண்டனர். மேலும், புலியின் கால் தடங்கள் பதிந்து இருக்கும் இடங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.



இதையடுத்து மாவட்ட வன அலுவலர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிராம மக்கள் புலி நடமாட்டத்தை குறித்து கொடுத்த தகவலையடுத்து, புலி நடமாட்டம் உள்ள பகுதியில் கேமராக்களை பொருத்தி உள்ளதாகவும், கேமராவில் புலி தென்பட்டவுடன் அதன் வயது மற்றும் அதனுடைய நடவடிக்கைகள் குறித்துஉறுதி செய்யப்பட்ட பின்பு அதை பிடிப்பதற்கான நடவடிக்கைகள்

எடுக்கப்படும் என்றார்.

மேலும்,புலி நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், எனவும் மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.





Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...